அதிபர், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஒலி பெருக்கி பொருத்திய வாகனம் ஓட்டிய சாரதி கைது!

ஆசிரியர் - Editor I
அதிபர், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஒலி பெருக்கி பொருத்திய வாகனம் ஓட்டிய சாரதி கைது!

யாழ்.நகரில் அதிபர், ஆசிரியர்களால் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு ஒலி பெருக்கி பெட்டிகளை பொருத்திச் சென்ற வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

நேற்று பகல் யாழ்.நகர் பகுதியில் ஆசிரியர்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன்போது ஒலிபெருக்கிப் பெட்டி (Box) ஏற்றியபடி போராட்டத்தில் பங்கேற்றிருந்த

வாகனச் சாரதி பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டிருக்கின்றார். அங்கு அவர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் அதேவேளை ஒலிபெருக்கிப் பெட்டி உரிமையாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு