செப்டம்பர் மாதத்தின் பின்னர் நாட்டை மூடிவைத்திருக்கமாட்டேன்! அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இறுக்கம்..

ஆசிரியர் - Editor I
செப்டம்பர் மாதத்தின் பின்னர் நாட்டை மூடிவைத்திருக்கமாட்டேன்! அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இறுக்கம்..

செப்ரெம்பர் மாதத்தின் பின்னர் நாட்டை மூடி வைக்கும் எண்ணம் இல்லை. என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ திட்டவட்டமாக கூறியிருக்கின்றார். 

நேற்று 26ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாத நிறைவில் மேலும் 

0.5 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த தடுப்பூசிகளை ஏற்றினால் 80% தடுப்பூசி ஏற்றப்பட்டு முடியும் 

என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டை முடக்கி வைத்திருந்ததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என 

ஜனாதிபதி இதன்போது அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு