தேசிய சந்தன பூங்கா அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்துவைத்தார்.

ஆசிரியர் - Admin
தேசிய சந்தன பூங்கா அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்துவைத்தார்.

பத்தரமுல்லை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே அமைக்கப்பட்ட தேசிய சந்தன பூங்கா அமைச்சர் நாமல் ராஜபக்ஷ திறந்துவைத்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிக்காட்டலில் 2020 ஜூலை 20 ஆம் திகதி   தொடங்கப்பட்டன.

9 ஏக்கர் நிலத்தில்  பூங்காவில் 300 அரிதான சந்தன மரங்கள் மற்றும் 900 வௌர்ளை சந்தன செடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இப் பூங்காவிற்கு நடுவில் 200,000 லீற்றர் நீர் கொள்ளக்கூடிய 11 நீர் தடாகங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  900 மல்லிகை தாவரங்கள் உள்ளன.  

இந்த சந்தரமரப்பூங்காவில் அழகான முறையில் வர்ண மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. 

 பொது மக்கள் தமது குடும்பத்தினருடன் ஓய்வு நேரத்தை களிப்பதற்கு இந்த பூங்கா அமையுமென வீடமைப்பு அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடக காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், நூல் வெளியீடு போன்றவற்றை நடத்த இங்கு சந்தர்ப்பம் உண்டு.  பாரிய இரண்டு நீர் தாங்கிகளுக்கு மத்தியில் கலையரங்கொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

தேக அப்பியாசம், யோகா நிகழ்ச்சிகள், தியான நிகழ்ச்சிகளை நடத்தவும் இங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உணவகங்கள், 60 வாகனங்கள் தரித்து நிற்கக்கூடிய வாகன தரிப்பிடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளும் இங்குள்ளது. 

பொதுமக்களிடம் எவ்வித கட்டணமும் அறவிடாமல், அங்கு பிரவேசிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு