தற்­போதே உறுதியாகி விட்ட 2020 இன் வெற்றி…!

ஆசிரியர் - Admin
தற்­போதே உறுதியாகி விட்ட 2020 இன் வெற்றி…!

உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­றும் பய­ணத்தை ஆரம்­பித்­து­விட்டோம் எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு அர­சியல் வெற்றி இலக்கை அடை­வ­தற்­கான பய­ணத்தை ஆரம்­பிக்க நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை முக்­கிய திருப்­பு­மு­னை­யாக அமைந்­தது என தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை ஒருபோதும் மறக்­கப்­போ­வ­தில்லை.

அவற்றை நிறை­வேற்­று­வ­தற்­கான பய­ணத்தை ஆரம்­பிக்க உள்ளோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமை காரி­யா­ல­ய­மான சிறி­கொத்­தாவில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் வெற்­றி­யினை கொண்­டாடும் வகையில் நேற்று இடம்­பெற்ற வர­வேற்பு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரை­யாற்­றிய போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

மேலும்,
ஐக்­கிய தேசிய கட்சி பலம் வாய்ந்த கட்சி என்­பதை பாரா­ளு­மன்­றத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்­பி­னர்கள் நிரூ­பித்து விட்­டனர். நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையின் வெற்றி கூட்டு எதிர்க்­கட்­சிக்கு பாரிய பதி­ல­டி­யாக காணப்­ப­டு­கின்­றது. தேசிய அர­சாங்கம் மக்­க­ளுக்கு முன்­வைத்த வாக்­கு­று­தி­களை ஒரு­போதும் மறக்­கப்­போ­வ­தில்லை. உள்­ளு­ராட்சி மன்ற தேர்­தலில் நாட்டு மக்கள் தேசிய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக செயற்­ப­ட­வில்லை. எப்­படி செயற்­பட வேண்டும் என நினை­வுப்­ப­டுத்­தினர். மக்­க­ளுக்­காக பாரிய மாற்­றங்­களை ஐக்­கிய தேசிய கட்சி ஏற்­ப­டுத்தும்.

எனக்கு எதி­ராக கூட்டு எதிர்­கட்­ச­யினர் கொண்டு வந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை எனக்கு எதி­ரா­னது மட்­டு­மல்ல தேசிய அர­சாங்­கத்­திற்கும் நல்­லாட்­சிக்கும் எதி­ரா­ன­தா­கவே காணப்­பட்­டது. கட்­சியில் காணப்­பட்ட ஒரு சில குறை­களை மையப்­ப­டுத்தி சில விச­மிிகள் கட்­சிக்குள் பிள வினை ஏற்­ப­டுத்த முற்­பட்­டனர். அவர்­களின் முயற்­சிகள் தற்­போது தோல்­வி­ய­டைந்­துள்­ளன என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு