பாடசாலைகள் மீள ஆரம்பம்..! கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகள் மீள ஆரம்பம்..! கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விடுத்துள்ள அறிவிப்பு..

பாடசாலை ஆசிரியர்கள் சகலருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். 

இன்று பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே 

அமைச்சர் இதனைக் கூறினார். கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்று தடுப்பூசி போடப்படும், 

மேலும் இந்த திட்டம் நாளை (13) நிறைவடையும்.நாட்டில் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோருக்கு 

ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு