மாகாணங்களுக்கிடையில் 14ம் திகதி தொடக்கம் பேருந்து மற்றும் புகைரத சேவைகளை அதிகரிக்க திட்டம்! இதுதான் காரணமாம்..

ஆசிரியர் - Editor I
மாகாணங்களுக்கிடையில் 14ம் திகதி தொடக்கம் பேருந்து மற்றும் புகைரத சேவைகளை அதிகரிக்க திட்டம்! இதுதான் காரணமாம்..

மாகாணங்களுக்கிடையில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சேவையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு போதுமான பேருந்து மற்றும் புகைரத சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் என போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தேசிய கொரோனா கட்டுப்பாட்டு மத்திய நிலையத்தின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். மாகாணங்களுக்கிடையிலான பிரயாணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் 

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் எதிர்கொண்டுள்ள அசௌகரியத்தைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது,.அதற்கமைய, மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளிடம் 

சேவை அட்டை, நிறுவன பிரதானியின் கடிதம் என்பன கட்டாயம் இருக்க வேண்டும் என்றும், இந்த நிபந்தனையை பின்பற்றுவதற்கு தேவையான சகல ஆலோசனைகளையும் பஸ் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டும். 

என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு