திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி, உணவகங்களுக்கான கட்டுப்பாடு தளர்வு..! புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது..

ஆசிரியர் - Editor I
திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி, உணவகங்களுக்கான கட்டுப்பாடு தளர்வு..! புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது..

நாட்டில் புதிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் அடங்கிய அடுத்த 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் வழிகாட்டுதல் இன்று காலை தொடக்கம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகளின் படி

1 திருமண வைபவங்களுக்கு அனுமதி, திருமண மண்டபங்களில் 25 சதவீதம் அல்லது 150க்கும் குறைந்த அளவில் நபர்களுக்கு அனுமதி.

2 வழிபட்டு தலங்கள் திறக்க அனுமதி. 

3 50 பேருடன் இறுதி கிரியைகளை நடத்தலாம்.

4 50 இருக்கைகளுடன் மாநாடுகள் / கருத்தரங்குகளை நடத்தலாம். 

5 சினிமா திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்கள் 50% வருகையுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.

6 உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் அறிக்கை வெளியிடப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு