யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டியில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று! தீவிர காண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது கிராமம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டியில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று! தீவிர காண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது கிராமம்..

யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டி கடலுணவு தொழிற்சாலையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

நேற்றய தினம் பகல் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் புதிதாக 4 பேருக்கும், போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுவரை 25 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தம்பாட்டி கிராமம் நேற்று காலை தொடக்கம் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு