யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டி கிராமத்தை முடக்குமாறு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி மற்றும் சுகாதார பிரிவிடம் கோரிக்கை!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டி கிராமத்தை முடக்குமாறு மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி மற்றும் சுகாதார பிரிவிடம் கோரிக்கை!

யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டி கிராமத்தை முடக்குவதற்கான கோரிக்கை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி ஆகியவற்றுக்கு அனுப்பபடவுள்ளது. 

ஊர்காவற்றுறை தம்பாட்டிக் கிராமத்தில் ஒருவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் இன்று நடத்தப்பட்ட 21 பேரில் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்குத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடலுணவு பதப்படுத்தும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் இடையே இந்தத் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 98 ஊழியர்களில் இன்று 20 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

ஏனையோரிடம் நாளை பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தை முடக்குவதற்கான நடவடிக்கையில் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மற்றும் சுகாதாரதுறை எடுத்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு