மீண்டும் பயணத்தடை! அடுத்தவாரம் கூடி ஆராயவுள்ளது அரசாங்கம், டெல்ட்டா திரிபு வைரஸ் நாடு முழுவதும் பரவும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
மீண்டும் பயணத்தடை! அடுத்தவாரம் கூடி ஆராயவுள்ளது அரசாங்கம், டெல்ட்டா திரிபு வைரஸ் நாடு முழுவதும் பரவும் அபாயம்..

இந்தியா மற்றும் பிரித்தானியாவில் அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கும் டெல்ட்டா திரிவு வைரஸ் இலங்கையில் மேலும் தீவிரமடையகூடிய ஆபத்துள்ளதாக சுகாதார பிரிவினரால் எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், 

நாட்டில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதா இல்லையா என்கிற தீர்மானம் அடுத்தவாரத்தில் எடுக்கப்படலாம் என்று சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையில் டெல்டா மாறுபாடான கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 05 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலயைில் தொற்று மேலும் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு 

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது. டெல்டா மாறுபாடான தொற்று இலங்கையில் பரவியிருப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நாடளாவிய ரீதியில் பூகோள மட்டத்தில் எத்தனை பேருக்கு இந்தத் திரிபடைந்த தொற்று ஏற்பட்டிருக்கின்றது. 

என்பது பற்றிய பரிசோதனைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 05 தொற்றாளர்கள் இந்த டெல்டா மாறுபாடான தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் அவர்களைத்தவிரவேறு நபர்களுக்கு 

இத்தொற்று ஏற்பட்டிருப்பதற்கான எந்த உறுதிபடுத்தக்கூடிய தகவலும் இன்றுகாலை வரை சுகாதார அமைச்சிற்குக் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் நாடு முழுவதிலும் இந்தத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

எனவே சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் பரிசோதனை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை நாங்கள் நடத்திவருகின்றோம். இதேவேளை தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட மருத்துவர் ஹேமந்த ஹேரத், ஸ்ரீலங்கா முழுவதிலும் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை 

விதிப்பதா இல்லையா என்பது குறித்து அடுத்தவாரம் தீர்மானிக்கப்படும் என்று கூறினார். ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு காரணமாகவே தற்போது நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 

2000ஐ விட குறைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு