யாழ்.மாவட்ட மக்களுக்கு நா.உ. அங்கஜன் இராமநாதன் எச்சரிக்கை! அவதானமாக இருங்கள், பொலிஸாருக்கு தொியப்படுத்துங்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களுக்கு நா.உ. அங்கஜன் இராமநாதன் எச்சரிக்கை! அவதானமாக இருங்கள், பொலிஸாருக்கு தொியப்படுத்துங்கள்..

பிள்ளைகளின் கல்வி செலவுகளை தாங்கள் பொறுப்பேற்பதாக கூறி யாழ்ப்பாணத்தில் பணம் வசூலிக்கும் கும்பல் ஒன்று செயற்படுவதாக கூறியிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், 

அரசியல்கட்சிகள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயரைப் பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகள் ஊடாக நூதனமாக பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் இந்த குழு ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார். 

எனவே பொதுமக்கள் இவ்வாறான மோசடி பேர்வழிகள் தொடர்பில் கவனமாக இருக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

அவ்வாறான பணம் வசூலிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளும் எக்காலத்திலும் எந்தவொரு அரசியல்கட்சிகள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படுவதில்லை என்பதை 

மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றோம். ஆகையால் குறித்த இனந்தெரியாத நபர்கள் மற்றும் இனந்தெரியாத தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதோடு, 

உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்துங்கள். இதே போன்ற மோசடிகள் சில மாதங்களுக்கு முன்னர் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு