யாழ்.கோவில் வீதி விடுதியில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உட்பட 6 பேருக்கும் விளக்கமறியல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோவில் வீதி விடுதியில் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உட்பட 6 பேருக்கும் விளக்கமறியல்..!

யாழ்.நல்லுார் - கோவில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் சமூக பிறழ்வு நடத்தையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜீலை - 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோவில் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் சமூக பிறழ்வு நடத்தையில் சிலர் ஈடுபடுவதாக வழங்கப்பட்டிருந்த தகவலின் அடிப்படையில் விடுதியைச் சோதனையிடுவதற்கான அனுமதி யாழ்.நீதிவான் நீதிமன்றில் 

மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பிரிவினரால் பெறப்பட்டது.இன்று முற்பகல் விடுதியைச் சோதனையிட்ட போது, அங்கு தங்கியிருந்த 3 இளைஞர்களும், 

2 பெண்களும் விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர். குருநகர் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 21, 24 வயதுடைய இளம் பெண்களும் உரும்பிராயைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் 

விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்கள் 6 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் மாவட்ட நீதிபதி சி.சதீஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 

சந்தேக நபர்கள் ஆறு பேரையும் வரும் ஜூலை 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு