யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் இணைந்தார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் இணைந்தார்..

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் யாழ்.சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். 

பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த கைதிகளில் 16 தமிழ் அரசியல் கைதிகளும் மற்றும், 

77 சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையிலேயே யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு