யாழ்.மாவட்டத்தில் பதுக்கல் வியாபாரிகள் மும்முரம்..! பெருமளவு மதுபான போத்தல்களுடன் 4 பேர் சிக்கினர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பதுக்கல் வியாபாரிகள் மும்முரம்..! பெருமளவு மதுபான போத்தல்களுடன் 4 பேர் சிக்கினர்..

யாழ்.சாவகச்சோியில் பெருமளவு மதுபான போத்தல்களுடன் 4 பதுக்கல் வியாபாரிகளை மதுவரி திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். 

நேற்றய தினம் இரவு தொடக்கம் பயணத்தடை மீள அமுலாகியுள்ள நிலையில் பதுக்கல் வியாபாரிகளை தேடி நேற்று மதுவரி திணைக்களம் சோதனை நடத்தியிருந்தது. 

இதன்போதே மேற்படி 4 பேரும் சாவகச்சோி, கொடிகாமம் பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

அவர்களிடமிருந்து 180 மில்லி லீற்றர் அளவுடைய 150 மதுபான போத்தல்களும், 750 மில்லி லீற்றர் அளவுடைய 3 மதுபான போத்தல்களும், 

500 மில்லி லீற்றர் அளவுடைய 72 பியர் ரின்களும் மீட்க்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு