பதுக்கல் வியாபாரிகள் தலையில் இடி! விசேட வர்த்தமானி வெளியானது, 7 நாட்கள் அவகாசம்..

ஆசிரியர் - Editor I
பதுக்கல் வியாபாரிகள் தலையில் இடி! விசேட வர்த்தமானி வெளியானது, 7 நாட்கள் அவகாசம்..

அரிசி, நெல், சீனி, பால்மா போன்ற அத்தியாவசிய பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருப்பவர்கள் அது தொடர்பான விபரங்களை 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்து கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.மறைத்து வைக்கப்பட்டுள்ள அரசி மற்றும் நெல்லை வௌியில் கொண்டு வருவதற்காக இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் விசேடமாக வௌியிடப்படவுள்ளதாக அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

மேலும் தமது அறுவடைகளை சேமித்து வைத்துள்ள விவசாயிகளுக்கு இந்த வர்த்தமானி அறிவித்தலின் விதிகள் பொருந்தாது என அமைச்சர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு