தேசிய கொவிட் தடுப்பு செயலணி மற்றும் சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை..!

ஆசிரியர் - Editor I
தேசிய கொவிட் தடுப்பு செயலணி மற்றும் சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை..!

நாட்டுக்கு 3வது டோஸ் தடுப்பூசி தேவைப்பட்டால் அதனை பெறுவதற்கான நடவடிக்கையை இப்போதே தொடங்குமாறு ஜனாதிபதி சுகாதார துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதுடன், உலகில் பல முன்னணி நாடுகள் 3வது டோஸ் தடுப்பூசி கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கின்றார். 

நேற்றுமாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் அவசர கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். குறித்த சந்திப்பின்போது ஜனாதிபதி மேலும் கூறியதாவது, பல அரச தலைவர்களுடன் கலந்துரையாடி கஷ்டத்திற்கு மத்தியில் பெற்றுக்கொண்ட தடுப்பூசிகளை 

வெளிப்படைத்தன்மையுடனும் முறையாகவும் வழங்க வேண்டும் எனவும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என இனங்காணப்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் 

தடுப்பூசி வழங்கப்படவேண்டுமெனவும் முறையான தடுப்பூசி ஏற்றல் மற்றும் தகவல் சேகரிப்புக்கு விசேட தரவுத்தளம் பேணப்பட வேண்டுமெனவும் கொவிட் அல்லாத மரணங்களை பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை .எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

சுகாதாரப் பரிந்துரைகளின்படி, உலகளாவிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, தடுப்பூசி ஏற்றுவதில் மூன்றாவது டோஸ் தேவைப்படுமாக இருந்தால், அதனை இப்போதே பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

உலகின் பல முன்னணி நாடுகள் மூன்றாவது டோஸுக்கான தடுப்பூசிகளை தற்போது கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளன. இலங்கையும் இது குறித்து விசேட கவனம் செலுத்தி மூன்றாவது டோஸ் வழங்குவதற்கான அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உலகெங்கிலும் தடுப்பூசிகளுக்கு பெரும் கேள்வி உள்ளது. 

இந்தப் போட்டி சூழ்நிலையில், இலங்கைக்கு அதிகளவு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள பல நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி உதவி கோரியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அந்தவகையில், மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள தடுப்பூசிகளை வெளிப்படைத்தன்மையுடனும் முறையாகவும் வழங்க வேண்டியதன் அவசியத்தை 

ஜனாதிபதி வலியுறுத்தினார். தற்போது அதிகளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி ஏற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். 

அதே நேரம், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். அதிகளவானவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் கொவிட் நோய்த்தொற்று பரவுவதையும், மக்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாவதையும் தடுக்க முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். 

முறையான தடுப்பூசி ஏற்றல் மற்றும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வோர் பற்றிய தரவுகளை சேகரிப்பதற்காக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) விசேட மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கிராம சேவகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு 

திகதி மற்றும் நேரத்தை இலகுவாக ஒதுக்கிக் கொள்ள முடியும். தற்போது தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்கள் மற்றும் எதிர்காலத்தில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள இருக்கின்றவர்கள் அனைவரையும் பற்றிய தகவல்களை உள்ளடக்கவும், தடுப்பூசி தொடர்பில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிச் சான்றிதழை வழங்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

கொவிட் வைரஸ் தொற்று அல்லாமல் மரணிப்பவர்களுக்கான இறுதிக் கிரியைகளும், பி.சி.ஆர். பரிசோதனைகளின் காரணமாகத் தாமதப்படுகின்றன என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இதைக் கருத்திற் கொண்டு, வேறு காரணங்களால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை 24 மணி நேரத்திற்குள் நடத்த நடவடிக்கை எடுக்க 

கொவிட் ஒழிப்பு விசேட குழு முடிவு செய்தது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு