நாட்டில் ஒரு நாளில் அதிகபட்ட உயிரிழப்பு பதிவானது..! 54 பேர் உயிரிழப்பு, 32 ஆண்கள், 22 பெண்கள்..

ஆசிரியர் - Editor I
நாட்டில் ஒரு நாளில் அதிகபட்ட உயிரிழப்பு பதிவானது..! 54 பேர் உயிரிழப்பு, 32 ஆண்கள், 22 பெண்கள்..

நாட்டில் கொரோனா தொற்றினால் நேற்றய தினம் 54 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோயியல் பிரிவு அறிவித்திருக்கின்றது. 

இதேவேளை நேற்றய தினம் 2637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தொற்றுநோயியல் பரிவு தொிவித்துள்ளது. 

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 10 ஆயிரத்து 661ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 54 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், இதுவே, இலங்கையில் ஒரேநாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பாகும். 

இவ்வாறு உயிரிழந்தவர்களில், 32 ஆண்களும் 22 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு