ஊரடங்கு என்ற பேச்சுக்கே இப்போது அவசியமில்லை..! ஊரடங்கு குறித்து கோரிக்கையும் இல்லை, நாம் அதை குறித்து ஆராயவுமில்லை..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு என்ற பேச்சுக்கே இப்போது அவசியமில்லை..! ஊரடங்கு குறித்து கோரிக்கையும் இல்லை, நாம் அதை குறித்து ஆராயவுமில்லை..

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணத்தடையை தளர்த்திவிட்டு முழுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இது கறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது. முழுமையான ஊரடங்கினை பிறப்பிக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கவில்லை. கொவிட் தொடர்பான செயலணியும் இது குறித்து ஆராயவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் அவ்வாறான முடிவை எடுக்கவேண்டிய அவசியமில்லை 

ஆனால் அவ்வாறான தேவையேற்பட்டால் அதிகாரிகள் அது குறித்து ஆராய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனாவைரஸ் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எடுக்கும் எந்த முடிவு குறித்தும் அரசாங்க தகவல்திணைக்களமோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களோ தகவல் வழங்கும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு