பயணத்தடை நீக்கும் தீர்மானம் நிலமைகளை ஆழமாக அவதானித்த பின்பே எடுக்கப்படும்! பயணத் தடை நீக்கப்பட்டாலும் மிக இறுக்கமான கட்டுப்பாடு தொடரும்..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை நீக்கும் தீர்மானம் நிலமைகளை ஆழமாக அவதானித்த பின்பே எடுக்கப்படும்! பயணத் தடை நீக்கப்பட்டாலும் மிக இறுக்கமான கட்டுப்பாடு தொடரும்..

நாட்டில் தற்போதுள்ள நிலமைகளை மிக ஆழமாக அவதானிக்கிறோம். அதன் பெறுபேறுகளை பொறுத்தே பயணத்தடையை நீக்குவது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்போம் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார். 

அதற்கமைய போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படும்போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அவதானம் செலுத்தும் அதே வேளை, இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளால் பெற்றுக்கொண்ட பயன்களை 

தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு