நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..! விற்பனை செய்ய முடியாமலுள்ள மரக்கறி, பழங்களை அரசு கொள்வனவு செய்யும்..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி..! விற்பனை செய்ய முடியாமலுள்ள மரக்கறி, பழங்களை அரசு கொள்வனவு செய்யும்..

பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் விற்பனை செய்ய முடியாமல் தேங்கியிருக்கும் மரக்கறி மற்றும் பழங்களை மாவட்ட விலைமனுக் குழுவின் விலையின் அடிப்படையில் 

மாவட்ட செயலாளர்களினூடாக கொள்வனவு செய்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் மரக்கறி மற்றும் பழவகைகளை கொரோனா சிகிச்சை மையம், அரச மருத்துவமனைகள், 

முப்படை மற்றும் நலன்புரி முகாம்களுக்கும், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கும் தேவைக்கேற்ப இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சரினால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு