பயணத்தடை நீடிப்பா? இல்லையா? 11ம் திகதி முடிவு அறிவிக்கப்படும் என தகவல்..

ஆசிரியர் - Editor I
பயணத்தடை நீடிப்பா? இல்லையா? 11ம் திகதி முடிவு அறிவிக்கப்படும் என தகவல்..

நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத் தடையை நீடிப்பதா? இல்லையா? என்ற முடிவு 11ம் திகதி இறுதி முடிவு எடுக்கப்படும் என சிங்கள ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும் தேசிய கொரோனாத் தடுப்புச் செயலணிக் கூட்டத்தின்போதே இது குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கப்படும் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இம்மாதம் முழுவதும் பயணத் தடையை அமுல்படுத்துமாறும், குறைந்தபட்சம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையாவது கடும் கட்டுப்பாடுகள் அவசியம் எனவும் சுகாதாரத் தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன 

என்பது குறிப்பிடத்தக்கது.பயணத் தடை நீடிப்பு குறித்து அரச தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு