பாடசாலைகள் மீள திறப்பு குறித்து..! கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகள் மீள திறப்பு குறித்து..! கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விடுத்துள்ள அறிவிப்பு..

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். 

இன்று (திங்கட்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

மேலும் ஜூன் 29 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளரை மேற்கோளிட்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் 

முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு, பாடசாலைகள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் 

மற்றும் பிரத்தியேக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு