14ம் திகதிக்கு இன்னும் ஒருவாரம் உள்ளது! பயணத்தடை நீடிக்கப்பட்டால் அறிவிப்போம், இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
14ம் திகதிக்கு இன்னும் ஒருவாரம் உள்ளது! பயணத்தடை நீடிக்கப்பட்டால் அறிவிப்போம், இராணுவ தளபதி அறிவிப்பு..

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணத் தடையை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

சிங்கள ஊடகமொன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இன்று காலை வரையில் எவ்வித அறிவுறுத்தலும் வரவில்லை. 

எனவும் அவர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக ஜனாதிபதியிடமிருந்தோ அல்லது பணிக்குழுவிடமிருந்தோ இதுபோன்ற எந்தவொரு பரிந்துரையும் தங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டள்ளார்.

இந்த நிலையில், 14 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால், தேவை ஏற்படின் பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது குறித்து அறிவிக்கப்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு