நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ளபோது தேவையற்று வீதிகளில் அலைவோருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்! பொலிஸ்மா அதிபர் பணிப்பு..

ஆசிரியர் - Editor I
நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ளபோது தேவையற்று வீதிகளில் அலைவோருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்! பொலிஸ்மா அதிபர் பணிப்பு..

நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் தேவையற்று வீதிகளில் அலைந்து திரிவோரை கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பயண கட்டுப்பாட்டை மீறுவோரை அடையாளம் கண்டு அவர்களது பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகின்றது. 

பொலிஸ் அதிகாரிகளால் தனிமைப்படுத்த முடியாது என்பதால் பொலிஸாரின் வேண்டுகோளின் அடிப்படையில் சுகாதார அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு