யாழ்.பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக பிரியந்த லியனகே நியமனம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக பிரியந்த லியனகே நியமனம்..!

யாழ்.பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபராக பிரியந்த லியனகே நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். 

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைகள் பிரகாரம் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் 

விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவின் பணிப்பாளராக இருந்த பிரியந்த லியனகே, ஆணைக் குழுவின் காலம் நிறைவுற்ற பின்னர் 

பொலிஸ் தலைமையகத்தில் பொறுப்புக்கள் எவையும் வழங்கப்படாது கடமையில் அமர்த்தப்பட்டிருந்தார். 

இவ்வாறான நிலையிலேயே அவர் தற்போது யாழ். பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு