பயண கட்டுப்பாட்டை 21ம் திகதிவரை நீடிக்க அரசு தீவிர ஆலோசனை! நாளை முதல் பொலிஸார் சிறப்பு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
பயண கட்டுப்பாட்டை 21ம் திகதிவரை நீடிக்க அரசு தீவிர ஆலோசனை! நாளை முதல் பொலிஸார் சிறப்பு நடவடிக்கை..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பணத்தடையை இம்மாதம் 21ம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதற்கிடையில் நடைமுறையில் உள்ள பயணத்தடை நீடிக்கப்படவேண்டும். என சுகாதார பிரிவினரும் கோரிக்கை முன்வைத்திருப்பதாக அறிய முடிகிறது. 

எதிர்வரும் 14ம ் திகதிவரை பயணத்தடை அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

ஆனாலும் பயணத்தடை அமுலில் இருக்கும் காலத்திலும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்தே காணப்படுவதுடன்,

கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து ஆபத்தான நிலை நீடித்து வருகின்றது. இந்நிலையிலேயே பயணத்தடையை

எதிர்வரும் 21ம் திகதிவரை நீடிக்க அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை பயணத்தடை காலத்தில் மக்கள் பொறுப்பற்று நடப்பதால், 

கட்டுப்பாடுகளை மேலும் இறுக்க நாளை தொடக்கம் கட்டுப்பாடுகளை இறுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாகவும் தொியவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு