மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிகளுக்கு யாழ்.மாவட்டத்திலிருந்து மீன் விநியோகம்..

ஆசிரியர் - Editor I
மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிகளுக்கு யாழ்.மாவட்டத்திலிருந்து மீன் விநியோகம்..

எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் நீர்கொழும்பு முதல் பாணந்துறைவரையான கடற்பகுதியில் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் பல பகுதிகளில் உள்ள கடல்களில் இருந்து 

மீன்கள் நீர்கொழும்பில் உள்ள ஒரு மையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த மீன்களை மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலில் கப்பல் தீ விபத்துக்குள்ளானதால், நீர்கொழும்பு முதல் பானந்துறை வரையிலான கடற்பரப்பில் மீன் பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்பிடித் துறை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு