தீவிர நிலையில் நீடிக்கும் புத்தாண்டு கொத்தணி..! நேற்று மீண்டும் 3 ஆயிரத்தை கடந்த தொற்றாளர் எண்ணிக்கை, 39 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
தீவிர நிலையில் நீடிக்கும் புத்தாண்டு கொத்தணி..! நேற்று மீண்டும் 3 ஆயிரத்தை கடந்த தொற்றாளர் எண்ணிக்கை, 39 மரணங்கள் பதிவு..

நாட்டில் கடந்த 11 தினங்களுக்கு பின்னர் நேற்றய தினம் சுமார் 3306 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் கொரோனா அபாயம் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அபாயம் தொடர்ந்தே வருகின்றது. 

இந்நிலையில் நாட்டில் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 92 547 ஆக உயர்வடைந்துள்ளது. 

இவர்களில் 94 532 தொற்றாளர்கள் புத்தாண்டின் பின்னர் உருவாகிய கொத்தணியில் இனங்காணப்பட்டவர்களாவர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,566ஆக 

அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு