யாழ்ப்பாணம் - சாவகச்சோி வரையில் வந்துவிட்டது சீனா..! தனி சீன மொழியில் பெயர் பலகை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - சாவகச்சோி வரையில் வந்துவிட்டது சீனா..! தனி சீன மொழியில் பெயர் பலகை..

யாழ்.சாவகச்சோியில் சீன அரச நிறுவனமான China State Construction Engineering Corporation சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது. 

 அலுவலக பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதியுள்ளதோடு தனியான பெயர் பலகைய்யும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது. 

காத்தான்குடியில் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளதை புத்த பிக்குகளும் ஆளும் கட்சியும் அரபி என்ன இலங்கையின் ஆட்சி மொழியா என்று கேட்டு போராடியவர்கள், 

இன்று சீன மொழி இலங்கையில் எங்கும் பயன்படுத்தப்படுவதை கேள்விக்கு உட்படுத்தவில்லை. சீன தூதர் சட்டமா அதிபர் மாளிகையில் வைத்த கல்வெட்டில் 

சீன மொழி இருந்ததற்கு தாங்கள் பரிசாக வழங்கிய இடம் அதனால் சீன மொழியை பயன்படுத்தினோம் என்று சால்ஜாப்பு கூறியிருந்தார். 

வடகிழக்கில் தமிழ் மொழி பிரதான மொழி என்று இருக்கும் பட்சத்தில், தமிழும் இல்லை சிங்களமும் இல்லாது தனியே சீனமொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

15ம் நூற்றாண்டில் சீனா இலங்கையை ஆக்கிரமித்து சிங்கள மன்னனை சிறை பிடித்து சீனாவிற்கு கொண்டு சென்ற நிலை 21ம் நூற்றாண்டிலும் 

நடக்குமா எனக் கேள்வி எழுப்பப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு