நாடு முழுவதும் 5 ஆயிரம் ரூபாய் உதவிக் கொடுப்பனவு..! கொடுப்பனவு பெற தகுதியானவர்கள் பட்டியலை வெளியிட்ட ஜனாதிபதி செயலகம்..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் 5 ஆயிரம் ரூபாய் உதவிக் கொடுப்பனவு..! கொடுப்பனவு பெற தகுதியானவர்கள் பட்டியலை வெளியிட்ட ஜனாதிபதி செயலகம்..

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படவிருக்கின்றது. குறித்த உதவித் தொகை பெறவுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றது. 

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் பணிப்பிற்கமைய உதவித் தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைக ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் உதவித்திட்டம் பெற தகுதியுடைய பயனாளிகள் விபரம் வருமாறு, 

1.நிரந்தர வருமானம் பெறும் அரச ஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்கள்.

2. சமுர்த்தி பெறும் குடும்ப உறுப்பினர்கள்.

3. சமுர்த்திபெற தகுதி இருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காது காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள்.

4. 70 வயதினைக் கடந்த மூத்தவர்கள்.

5. 70 வயது பூர்த்தியடைந்தும் இதுவரை மூத்தோர் கொடுப்பனவிற்கான முத்திரையினைப் பெறாது காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள்.

6. மாற்றுத் திறனாளிகள்.

7. இதுவரை கொடுப்பனவினைப் பெறாது காத்திருப்பு பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகள்.

8. PMA (மஞ்சள் நிற அட்டை) பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களும்.

9. சிறுநீரக பாதிப்பு போன்ற பாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுருப்போர்கள்.

10. ஒருவர் சமுர்த்தி பெறுகின்றவர் அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர், அத்துடன் அவர் மூத்தோர் கொடுப்பனவினைப் பெறுகின்றவர், அல்லது அதனை பெற தகுதியுடையவராயின் - அவர் மேற்படி இரண்டு வகைக்குட்பட்ட பெறுவனவினைகளையும் (5000 + 5000 = 10,000/=) பெறுவதற்கு தகுதி உடையவராவார்.

11. இந்த உதவி தொகையினை பெற தகுதியுடையோர் எவர் என்ற முழுமையான தகவல்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில், கிராம சேவகர்கள் ஊடாக மக்கள் பெற முடியும்

இந்த சேவையினை ஒருங்கிணைப்பதற்காக ஜனாதிபதி செயலகம் 24 மணி நேரமும் பொது மக்களுக்காகச் செயற்பட்டுக்கொண்டீருக்கின்றது.

எனவே, இந்த சேவைக்கு பொறுப்பான அதிகாரிகளை பிரதேச செயலக மட்டங்களில் தொடர்பு கொண்டு இந்த கொடுப்பனவினை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு