SuperTopAds

முல்லைத்தீவில் காணாமல் போனோர் பணியகத்தின் உப அலுவலகம்:- மங்கள உறுதி

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவில் காணாமல் போனோர் பணியகத்தின் உப அலுவலகம்:- மங்கள உறுதி

காணா­மல் போனோர் பணி­ய­கத்­தின் உப அலு­வ­கம் ஒன்று முல்­லைத் தீவு மாவட்­டச் செய­ல­கத்­தில் நிறு­வப்­ப­டும். அதற்­கான நட­வ­டிக்கை விரை­வில் எடுக்­கப்­ப­டும் என்று  நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, முல்­லைத்­தீ­வில் நேற்று காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளி­டம்  உறு­தி­ய­ளித்­தார்.

காணா­மல் போனோர் பணி­ய­கத்­தின் உப அலு­வ­கம் ஒன்று முல்­லைத் தீவு மாவட்­டச் செய­ல­கத்­தில் நிறு­வப்­ப­டும். அதற்­கான நட­வ­டிக்கை விரை­வில் எடுக்­கப்­ப­டும் என்று நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, முல்­லைத்­தீ­வில் நேற்று காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளி­டம் உறு­தி­ய­ளித்­தார்.

முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தில் அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­விட்டு அங்­கி­ருந்து புறப்­ப­டும்­போது போராட்­டக்­கா­ரர்­க­ளைக் கண்டு, தானாக அவர்­க­ளி­டம் சென்று கலந்­து­ரை­யா­டி­னார். அவர்­க­ளின் போராட்­டம் தொடர்­பில் கேட்­ட­றிந்­தார். காணா­மல் ஆக்­கப்­பட்ட உற­வி­னர்­க­ளி­டம் அமைச்­சர், “காணா­மற் போனோர் பற்­றிய விட­யங்­க­ளைக் கையா­ழும் அலு­வ­ல­கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. உங்­க­ளுக்­குத் தேவை­யான நட­வ­டிக்­கை­கள் அவற்­றின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­ப­டும். அதன் ஊடாக உங்­க­ளுக்கு தீர்­வு­கள் வழங்­கப்­ப­டும்” என்­றார்.

எனி­னும், மங்­க­ள­வின் கருத்தை ஏற்­க­ம­றுத்த உற­வு­கள் எமக்கு காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­காக நிய­மிக்­கப்­பட பணி­ய­கத்­தில் நம்­பிக்கை இல்லை. நீண்­ட­கா­ல­மாக எம்மை தவிக்­க­விட்­டுள்­ள­னர். நாம் மன ரீதி­யா­க­வும் பொரு­ளா­தார ரீதி­யா­க­வும் பாதிக்­கப்­பட்­டுள்­ளோம்” என்று அமைச்­ச­ரி­டம் கூறி­னார்.

இத­னைக் கேட்ட அமைச்­சர் “காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான பணி­ய­கம் கொழும்­பில் இருப்­ப­தால் உங்­க­ளுக்கு அச்­ச­நிலை இருக்­க­லாம். நான் வெளிவிவகார அமைச்­ச­ராக இருந்­த­போது இதில் அதிக கரி­சனை கொண்­டி­ருந்­த­வன் என்ற அடிப்­ப­டை­யில் இந்த பணி­ய­கத்­தின் உப அலு­வ­ல­கம் ஒன்றை முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­ல­கத்­தில் நிறுவ தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கின்­றேன். உங்­கள் மாவட்­டத்­தில் இந்­தப் பணி­ய­கம் நிறு­வப்­பட்­டால் நீங்­கள் எவ்­வித தயக்­க­மும் இன்றி சுதந்­தி­ர­மா­கப் பிரச்­சி­னை­க­ளைக் கூறித் தீர்­வைப் பெற முடி­யும். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான பணி­ய­கம் உங்­க­ளுக்­காக வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் செயற்­ப­டும்” என்­றார் .