யாழ்.மாவட்டத்திலுள்ள சகல மதுபானசாலைகளுக்கும் சீல்..! சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய மதுவரி திணைக்களம் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திலுள்ள சகல மதுபானசாலைகளுக்கும் சீல்..! சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய மதுவரி திணைக்களம் நடவடிக்கை..

யாழ்.மாவட்டத்திலுள்ள சகல மதுபானசாலைகள் அனைத்துக்கும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய மதுவரி திணைக்களத்தினால் சீல் வைக்கப்பட்டிருக்கின்றது. 

நாட்டில் கொரோனா பரவல் தீவிரம் காரணமாக பயணத்தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், நாட்டில் கொவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 

பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படும் காலப்பகுதியில் மதுபான சாலைகளைத் திறக்க அனுமதியில்லை என்று அறிவுறுத்தியுள்ளது. 

அதனால் நாடுமுழுவதும் மதுபான சாலைகள் மதுவரித் திணைக்களத்தினரால் பூட்டப்பட்டு முத்திரையிடப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சட்டத்துக்குப் புறம்பாக அதிக விலைகளில் மதுபான விற்பனைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனை தடுக்கும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு