யாழ்.மாவட்டத்தில் நடமாடும் வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி..! யாழ்.மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நடமாடும் வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி..! யாழ்.மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் மக்களுடைய நன்மை கருதி நடமாடும் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதியை கிராமசேவகர் ஊடாக பிரதேச செயலகங்களிடமிருந்து அனுமதியை பெறலாம். 

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். சமகால நிலமைகள் குறித்து இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

யாழ்.மாவட்டம் முழுவதும் கொரோனா அபாயம் நீடித்துவரும் நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு  மிக இறுக்கமான பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு

நடமாடும் வியாபார நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. குறிப்பாக மரக்கறி, கடலுணவு மற்றும் பலசரக்கு பொருட்கள், வெதுப்பக உற்பத்திகள், மருந்துவகைகளை வீடுகளுக்கே சென்று மக்களுக்கு வழங்கும் வகையில் அனுமதிகளை வழங்குமாறு 

பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனவே வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவோர் தமது பகுதி கிராமசேவகர்கள் ஊடாக பிரதேச செயலரின் அனுமதியை பெற்று நடமாடும் வியாரத்தை மேற்கொள்ள முடியும் என மாவட்ட செயலர் கூறினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு