யாழ்.மாநகரில் வாகனங்கள் நிறுத்த தடை..! கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவம், பொதுமக்களே அவதானம் மீறுவோர் மீது நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் வாகனங்கள் நிறுத்த தடை..! கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவம், பொதுமக்களே அவதானம் மீறுவோர் மீது நடவடிக்கை..

யாழ்.மாநகரின் மத்தியில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி தீர்மானம் எடுத்திருக்கின்றது. 

நேற்றய தினம் நடைபெற்றிருந்த யாழ்.மாவட்ட கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாநகரில் மின்சார நிலைய வீதி, ஸ்ரான்லி வீதி, வைத்தியசாலை வீதி என அனைத்து வீதிகளிலும் வீதி ஓரமாக வானங்கள் நிறுத்த தடை விதிக்கப்படுகின்றது. 

இதன் மூலம் நெருக்கடியை குறைப்பதுடன் போக்குவரத்து சேவைகளை தற்காலிகமாக நகர்த்த தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

இதேநேரம் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களிற்கான பொருட்களை ஏற்றி இறக்கும் பணிகளை பகலில் மேற்கொள்வதனை தவிர்த்து மாலை 5 மணிக்கு பின்பும் 

காலை 7 மணிக்கு முன்பும் மட்டுமே மேற்கொள்ளும் வகையிலேயே பணியாற்ற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை நாளை திங்கள் கிழமை தொடக்கம் அமுலுக்கு வருக்கின்றது. கண்காணிப்பு நடவடிக்கையினை இராணுவம் மேற்கொள்ளவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு