வார இறுதியில் வீடுகளில் இருங்கள்..! புத்தாண்டு கொண்டாட்டத்தின் விளைவே இது, அடுத்த சில நாட்களில் தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும்..

ஆசிரியர் - Editor I
வார இறுதியில் வீடுகளில் இருங்கள்..! புத்தாண்டு கொண்டாட்டத்தின் விளைவே இது, அடுத்த சில நாட்களில் தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும்..

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அடுத்த சில நாட்கள் தீவிரமாக உயர்வதை காணலாம். என கொவிட் -19 தடுப்பு தேசிய செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். 

சமகால கொரோனா நிலமைகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், சிங்கள -தமிழ் புத்தாண்டு பருவத்தில் சமூக இடைவெளி மற்றும் பிற சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற 

பொதுமக்கள் இணங்காததே இதற்குக் காரணம். வார இறுதியில் இலங்கையர் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் பெரியளவிலான ஒன்று கூடல்களைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு