இலங்கையில் கொரோனா தொற்று தீவிரம்..! நாடு முடக்கப்படாது, போக்குவரத்து கட்டுப்பாடுகளும் இல்லை, இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் கொரோனா தொற்று தீவிரம்..! நாடு முடக்கப்படாது, போக்குவரத்து கட்டுப்பாடுகளும் இல்லை, இராணுவ தளபதி அறிவிப்பு..

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடையும் நிலையில் நாட்டை முடக்கும் எந்தவொரு தீர்மானமும் இல்லை. என கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா, போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படாது எனவும் கூறியுள்ளார். 

இது குறித்து இராணுவ தளபதி மேலும் கூறுகையில், நாட்டை முடக்கும் தீர்மானம் அல்லது போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் பொதுமக்கள் பெருமளவில் கூடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றவேண்டும். எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு