மருமகனை அடித்து கொலை செய்து சடலத்தை வீதியில் எறிந்துவிட்டு சென்ற மாமன்..! தப்பி ஓடியவர் கைது..

ஆசிரியர் - Editor I
மருமகனை அடித்து கொலை செய்து சடலத்தை வீதியில் எறிந்துவிட்டு சென்ற மாமன்..! தப்பி ஓடியவர் கைது..

மாமனுக்கும் - மருமகனுக்குமிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் மாமனின் தாக்குதலுக்கு இலக்கான மருமகன் கொல்லப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் கொத்மலை - வெதமுல்ல கெமினிதென்ற பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

35 வயதான கணேசன் விஜயகுமார் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.தாக்குதல் தொடர்பில் 1990 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பெடுத்து அறிவித்த நிலையில் 

நோயாளர் காவு வண்டி அங்கு வர தாமதமானதால் தாக்குதலை நடத்திய மாமா தனது முச்சக்கர வண்டி மூலம் காயமடைந்தவரை நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார். 

இவ்வாறு கொண்டுச் செல்லும் போது நோயாளர் காவு வண்டி இடையில் வந்துள்ளது. அப்போது நோயாளர் காவு வண்டியில் வந்தவர்கள் காயமடைந்தவரை பரிசோதித்தபோது 

அவர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் தாக்குதலை நடத்தியவர் சடலத்தை கண்டி நுவரெலியா பிரதான வீதியில் வீசிவிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தாக்குதலை நடத்திய மாமா கொத்மலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டு 

பிரேத பரிசோதணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு