யாழ்.மாவட்டத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 750 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு..! துரித கதியில் நடப்பதாக மாவட்ட செயலர் அறிவிப்பு..
யாழ்.மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு அரசாங்கத்தின் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.
இது குறித்து யாழ்.மாவட்ட செயலர் மேலும் கூறியுள்ளதாவது, 1இலட்சத்து 48 ஆயிரத்து 750 பேர் வரை தொிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்கள் சமுத்திக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்கள், விசேட தேவையுடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்
உள்ளிட்ட 7 வகைப்பாட்டினருக்கு குறித்த உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மாவட்டத்தில் 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் குறித்த கொடுப்பனவுகள்
இன்று திங்கட்கிழமை காலை முதல் அதற்கான உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.