யாழ்.பருத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தபோது கொரோனா தொற்றுக்குள்ளான மயிலிட்டியை சேர்ந்த முதியவர் மரணம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தபோது கொரோனா தொற்றுக்குள்ளான மயிலிட்டியை சேர்ந்த முதியவர் மரணம்..!

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் முல்லோியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட யாழ்.மயிலிட்டி பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். 

யாழ்.பருத்தித்துறை வைத்தியசாலையின் 7ம் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த விடுதி முடக்கப்பட்டது. 

மேலும் அங்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் பகுதிக்கு மாற்றப்பட்டதுடன், அவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேலும் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அவர்களில் 5 பேர் முல்லோியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இதில் ஒருவரான மயிலிட்டியை சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். குறித்த முதியவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சுகாதார பிரிவினரின் கண்காணிப்புடன்

குடும்ப உறுப்பினர்கள் சிலர் மட்டும் முல்லோியாவுக்கு அனுப்பபட்டுள்ளனர். முல்லோியாவில் சுகாதார நடைமுறைகளுடன் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு