யாழ்.திருநெல்வேலி சந்தை நாளை திறக்கப்படுகிறது, பாற்பண்ணை பிரதேசம் நாளை மறுதினம் விடுவிக்கப்படுகிறது! பாரதிபுரம் தொடர்ந்தும் முடக்கலில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி சந்தை நாளை திறக்கப்படுகிறது, பாற்பண்ணை பிரதேசம் நாளை மறுதினம் விடுவிக்கப்படுகிறது! பாரதிபுரம் தொடர்ந்தும் முடக்கலில்..

யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் பாற்பண்ணை பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதிகள் முடக்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி சந்தை நாளைய தினமும், பாற்பணை பகுதி நாளை மறுதினமும் விடுவிக்கப்படவுள்ளது. 

மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். இதன்படி திருநெல்வேலி சந்தையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட வர்த்தகர்கள், மற்றும் பணியாளர்கள் கொண்ட வர்த்தக நிலையங்கள் தவிர்த்து, 

ஏனைய சகல வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் நாளை காலை தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாற்பண்ணை பகுதியில் பாரதிபுரம் கிராமத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 

இதனால் குறித்த பகுதி தவிர்ந்த மற்றய பகுதி திங்கள் கிழமை தொடக்கம் முடக்கலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு