மாகாணசபை தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம்..! பிரதமர் மஹிந்த தலமையில் கூடுகிறது கட்சி தலைவர்கள் கூட்டம்..

ஆசிரியர் - Editor I
மாகாணசபை தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம்..! பிரதமர் மஹிந்த தலமையில் கூடுகிறது கட்சி தலைவர்கள் கூட்டம்..

மாகாணசபை தேர்தல் தொடர்பில் இம் மாதம் 19ம் திகதி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார். 

ஏப்பிரல் 19ம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் சந்திப்பின்போது இது குறித்த தீர்மானம் எடுக்கப்படலாம். 

என அவர் தெரிவித்துள்ளார். பொதுஜனபெரமுன மாகாணசபை தேர்தலை உத்வேகத்துடன் எதிர்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தனித்தனியாக போட்டியிடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு