நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! ஜனாதிபதியின் உத்தரவையடுத்து துரித நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! ஜனாதிபதியின் உத்தரவையடுத்து துரித நடவடிக்கை..

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியிருக்கின்றார். 

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். புதுவருடத்திற்கு முன்னர் இந்த சலுகையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலணி மற்றும் சமுர்த்தி திணைக்களத்துடன் இணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு