வங்கியில் 136 மில்லியன் ரூபாய் வைப்பு செய்த 27 வயதான இளைஞன் பொலிஸாரினால் கைது..!

ஆசிரியர் - Editor I
வங்கியில் 136 மில்லியன் ரூபாய் வைப்பு செய்த 27 வயதான இளைஞன் பொலிஸாரினால் கைது..!

சுமார் 136 மில்லியன் ரூபாய் பணத்தை வங்கியில் வைப்பு செய்த 27 வயதான இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் மொறட்டுவ பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள சந்தேக நபர் தர்மசிறி பெரேராவுக்கு சொந்தமான பணமே 

இளைஞரின் வங்கிகணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

நாட்டில் பல்வேறு குற்றச் செயற்பாடுகளை செய்துவிட்டு, தற்போது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள தர்மசிறி பெரேரா என்ற சந்தேக நபருக்கு சொந்தமான பணமே 

இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு