நாளை தொடக்கம் மாநகரில் சிறப்பு நடவடிக்கை..! பொது இடங்களில் துப்புதல், கழிவுகளை கொட்டுதல் தடை, தண்டமும் விதிக்கப்படும்..

ஆசிரியர் - Editor I
நாளை தொடக்கம் மாநகரில் சிறப்பு நடவடிக்கை..! பொது இடங்களில் துப்புதல், கழிவுகளை கொட்டுதல் தடை, தண்டமும் விதிக்கப்படும்..

யாழ்.மாநகரில் நாளை தொடக்கம் மாநகர காவல்படை தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பொது இடங்களில் சுகாதாரத்தை பேணாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். 

இதன்படி பொது இடங்களில் வெற்றிலை அல்லது உமிழ்நீர் துப்புவோருக்கு 2 ஆயிரம் ரூபாய் தண்டமும், பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்படும். என முதல்வர் அறிவித்திருப்பதுடன், 

பொதுமக்கள் மாநகரின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு நடக்குமாறும் கேட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு