யாழ்.செம்பியன்பற்று கடலில் நடந்த துயரம்..! நண்பர்களுடன் கடலுக்கு சென்ற இளைஞன் படகு இயந்திரத்தின் சுழல் சக்கரத்திற்குள் தவறி விழுந்து மரணம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.செம்பியன்பற்று கடலில் நடந்த துயரம்..! நண்பர்களுடன் கடலுக்கு சென்ற இளைஞன் படகு இயந்திரத்தின் சுழல் சக்கரத்திற்குள் தவறி விழுந்து மரணம்..!

பொழுதுபோக்காக நண்பர்களுடன் படகில் கடலில் சென்ற 24 வயதான இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்றய தினம் செம்பியன்பற்று பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த கெனடி பிறின்ஸ்ரன் (வயது 24)என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

நண்பர்களுடன் படகில் பயணித்துக்கொண்டிருந்தபோது அவர் தவறி வீழ்ந்துள்ளார். அப்போது படகின் இயந்திரத் தின் சுழலி வெட்டியதில் அவர் படுகாயமடைந்து கடலில் மூழ்கினார். 

என்று கூறப்படுகின்றது.மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சுழியோடிகளின் துணையுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பின்னர் அவர் மீட்கப்பட்டார். அ

வரை அம்புலன்ஸ் மூலம் மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வடமராட்சி கிழக்குப் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு