யாழ்.மருதனார்மடம் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்..! சில மணிநேரத்தில் உரும்பிராய் பகுதியில் திருடனை மடக்கிய பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மருதனார்மடம் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்..! சில மணிநேரத்தில் உரும்பிராய் பகுதியில் திருடனை மடக்கிய பொலிஸார்..

யாழ்.மருதனார்மடம் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை ஒரு சில மணி நேரத்தில் கைப்பற்றிய பொலிஸார், திருடணை மடக்கி பிடித்திருக்கின்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, யாழ்.மருதனார்மடம் பகுதியில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் 

மோட்டார் சைக்கிளை நிறுத்திய நபர் ஒருவர் வர்த்தக நிலையத்திற்குள் சென்றிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடிச் செல்லப்பட்டிருக்கின்றது. 

இதனையடுத்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர் உடனடியாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்படு பதிவு செய்திருந்த நிலையில்

சம்பவம் தொடர்பில் அறிந்த யாழ்.மாவட்ட புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த விசாரணையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் சில மணிநேரத்தில் உரும்பிராயில் கைப்பற்றப்பட்டது. 

அதனைத் திருடிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார். 28 வயதுடைய சந்தேக நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டார். 

மோட்டார் சைக்கிளும் பொலிஸில் பாரப்படுத்தப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு