யாழ்.மாநகரில் பி.சி.ஆர் பரிசோதனை..! மாநகரம் தொடர்ந்து முடக்கப்படுமா? முடக்கம் நீக்கப்படுமா? இன்றைய பரிசோதனை முடிவுகளே தீர்மானிக்கும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் பி.சி.ஆர் பரிசோதனை..! மாநகரம் தொடர்ந்து முடக்கப்படுமா? முடக்கம் நீக்கப்படுமா? இன்றைய பரிசோதனை முடிவுகளே தீர்மானிக்கும்..

யாழ்.மாநகரில் முடக்கப்பட்டுள்ள பகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு (யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வசிப்போர் மட்டும்) இன்று  திங்கள் கிழமை  பீ.சி.ஆர் பரிசோதனை காலை 7.30 மணி முதல் நவீன சந்தை கட்டிட தொகுதியில் மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த முறை நெருக்கடி காரணமாக  மாநகரசபை எல்லைக்கு வெளியில் வதிவிடத்தைக் கொண்டவர்கள் அந்தந்தப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

கடந்த 28,29 ஆம் திகதிகளில் பிசிஆர் பரிசோதனை செய்தவர்களுக்கும், இதுவரை பிசிஆர் பரிசோதனை செய்யாதவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும்.

28,29 ஆம் திகதிகளில் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை நடைபெறும் செய்ய வேண்டாம் அவர்களுக்குப் பிறிதொருதினத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் அடிப்படையிலேயே மாநகரை தொடர்ந்து முடக்குவதா? முடக்கலில் இருந்து நீக்குவதா? என தீர்மானிக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு