யாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..! வர்த்தக நிலையம் தீக்கிரை..

ஆசிரியர் - Editor I
யாழ்.சுழிபுரத்தில் சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்து விபத்து..! வர்த்தக நிலையம் தீக்கிரை..

யாழ்.சுழிபுரம் மத்தி ஐயனார் கோவிலடியில் உள்ள கடை ஒன்றில் சிறியரக சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கடை உரிமையாளர் வேறு பகுதியில் வசித்துவரும் நிலையில் தனக்கு உணவு சமைப்பதற்காக கடைக்குள் சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றை வைத்திருந்த நிலையில் அது வெடித்துள்ளது. 

குறித்த சம்பவத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதபோதும் கடையிலிருந்த பெருமளவு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு