யாழ்.மருதனார்மடம் இராமநாதன் கல்லுாரி நாளை முதல் தற்காலிக முடக்கம்..! உடுவில் பிரதேசத்தில் அதிபர், ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி..
யாழ்.மருதனார்மடம் இராமநாதன் கல்லுாரி சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய நாளை தொடக்கம் தற்காலிகமாக முடக்கப்படுவதாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று பரவல் அபாயம காரணமாகவே குறித்த கல்லுாரி முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை இன்றைய தினம் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு அதிபருக்கும், ஆசிரியருக்கும் தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.