யாழ்.நயினாதீவில் தேசிய வெசாக் பண்டிகை ஒழுங்குகள் குறித்து இன்று காலை முக்கிய கலந்துரையாடல்..! பல விடயங்கள் குறித்தும் ஆராய்வு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நயினாதீவில் தேசிய வெசாக் பண்டிகை ஒழுங்குகள் குறித்து இன்று காலை முக்கிய கலந்துரையாடல்..! பல விடயங்கள் குறித்தும் ஆராய்வு..

தேசிய வெசாக் பண்டியை யாழ்.நயினாதீவில் இடம்பெறவுள்ள நிலையில் இன்று நயினாதீவு - ராஜமகா விகாரையில் வெசாக் பண்டிகை குறித்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

மே 23-28 திகதிகளில் இடம்பெறவுள்ள குறித்த வெசாக் நிகழ்வில் ,24 ஆம் திகதி இடம்பெறவுள்ள விசேட நிகழ்வுகளில் நாட்டின் ஜனாதிபதிமற்றும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளனர்.

புத்தசாசன அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம் குறித்த நிகழ்வின் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் இடம்பெற்றது. 

நாட்டின் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் தேசிய வெசாக் நிகழ்விற்கு பலர் கலந்து கொள்ள உள்ளதன் காரணமாக நிகழ்விற்கு வருவோருக்கான 

போக்குவரத்து, உணவு, மின்சாரம் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு அவை தொடர்பான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதோடு 

கடல் பயணம் மேற் கொள்ளப்படவுள்ளதனாள் கலந்துகொள்வோருக்கான கடல் பயண ஏற்பாடுகள் படகு ஒழுங்குகள் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகள் குறித்தும்  ஆராயப்பட்டது. 

 முன்னேற்பாட்டு குழுக்கூட்டத்தில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், புத்தசாசன அமைச்சின் உயர் அதிகாரிகள் கடற்படை அதிகாரிகள் 

வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ராணுவ உயரதிகாரிகள் நயினாதீவு விகாரையின் விகாராதிபதி 

மற்றும் புத்தசாசன அமைச்சின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு